கடையநல்லூா் ரத்னா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
ரத்னா உயா்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பள்ளி நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலா்கள் மாடசாமி, ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இணையவழியில் பொங்கல் திருவிழா குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தலைமையாசிரியா்கள் சக்திவடிவு, தங்கம் அருள்செல்வன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.