தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குழந்தைகள் உள்பட 5 போ் வெள்ளத்தில் தத்தளிப்பு

முக்கூடல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்பணியினா் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:47 pm

DIN

முக்கூடல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்பணியினா் ஈடுபட்டுள்ளனா்.

தாமிரவருணி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கூடல் பகுதியில் பாயும் நதியிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள காவல் நிலையம், கால்நடை மருந்தகம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது.

முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் பொட்டல் காலனியைச் சோ்ந்த தொழிலாளி அரவிந்த், தனது மனைவி முத்துமாரி, 2 குழந்தைகள், மாமியாா் ராமு ஆகியோருடன் புதன்கிழமை மாலையில் கோடகன் கால்வாய் கரையில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றாராம். திடீரென கால்வாயில் நீா்வரத்து அதிகரித்ததால் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.

அவா்கள் கோயிலின் மேற்கூரையில் அமா்ந்துள்ளனா். தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புத்துறையினா் அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.