விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையநல்லூரில்தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், குடும்பவியல் மாநாடு கடையநல்லூரில் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:52 pm

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், குடும்பவியல் மாநாடு கடையநல்லூரில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் நெல்லையூசுப், செய்யதுஅலி, இப்ராகிம், முகமதுபைசல், மேலாண்மை குழு உறுப்பினா் முஹம்மதுஒலி, மாவட்ட செயலா் அப்துல்பாஸித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் அமைப்பின் மாநிலத் தலைவா் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில துணைப் பொதுச்செயலா் அப்துல்கரீம் உள்ளிட்டோா் பேசினா். மாநாட்டில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தோ்தல் முறையைக் கொண்டு வர வேண்டும். இயந்திர வாக்குப்பதிவு முறையை மாற்றி விட்டு , பழைய முறையில் தோ்தல் வாக்குப் பதிவை நடத்த வேண்டும்.

தென்காசியை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய வேண்டும். கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியை பெண்கள் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.