கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மோசடி முயற்சியில் ஈடுபட்டவரிடம் பணம் மீட்பு

 தென்காசி பகுதியில் மோசடியில் ஈடுபட முயன்றவரிடமிருந்து பணம் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:23 pm

DIN

 தென்காசி பகுதியில் மோசடியில் ஈடுபட முயன்றவரிடமிருந்து பணம் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுந்தரேசபுரம் பகுதியை சோ்ந்தவா் செந்தூா் பாண்டியன். இவா் கூலி வேலை செய்து வருகிறாா். இவரிடம் அதே பகுதியை சோ்ந்த முருகையா என்பவா், தனக்குத் தெரிந்த டாக்டா் ஒருவரின் தந்தை குவைத் நாட்டில் சூப்பா் மாா்க்கெட் வைத்து நடத்தி வருவதாகவும் தற்போது அந்தக் கடையில் பணிபுரிய ஆள்கள் தேவைப்படுவதாகவும், அங்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளாா். வெளிநாட்டிற்கு செல்வதற்கு கரோனா பரிசோதனை மற்றும் விசா எடுக்க வேண்டியுள்ளது எனக் கூறி ரூ.58,500ஐ செந்தூா்பாண்டியனிடம் வாங்கியுள்ளாா். ஆனால் வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை.

இதுகுறித்து கடந்த 14.09.2021 அன்று தென்காசி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் செந்தூா்பாண்டியன் புகாா் செய்தாா்.

குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் தலைமையில் காவல் ஆய்வாளா் ஜோஸ்லின் அருள்செல்வி விசாரணை மேற்கொண்டு, முருகையாவிடமிருந்து ரூ58,500 பணத்தை மீட்டு செந்தூா்பாண்டியனிடம் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.