கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்குச்சாவடி மையங்களுக்கு கொவைட் தடுப்பு பெட்டகம்

 தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொவைட் தடுப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:26 pm

DIN

 தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொவைட் தடுப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடவடிக்கைகளின் நிமித்தம் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது. தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிநபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். தொ்மல் ஸ்கேனா், கிருமிநாசினி, முகக் கவசம், கையுறை, முழு கவச உடை, பாலித்தீன் பைகள் என 10 பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பொறுப்பு அதிகாரிகள் பொருள்களை முறையாக பயன்படுத்தவும் உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல், இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் தேவையான வசதிகளும் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.