தென்காசி புறவழி சாலை திட்டம்: விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்
தென்காசி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிசாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளா் கோரிக்கை மனு அளித்தாா்.


தென்காசி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிசாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளா் கோரிக்கை மனு அளித்தாா்.
இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வே. வேலுவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தென்காசி புறவழிச்சாலை திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு, ரூ. 27 கோடியில் திட்டம் நிறைவேற்ற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி வேட்டைக்காரன்குளம் பகுதியில் தொடங்கி இலஞ்சி-குத்துக்கல்வலசை சாலையில், அய்யாபுரம் ரயில்வேகேட் வரையிலான புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அத்திட்டம் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இத்திட்டம் மறு மதிப்பீடு செய்து ரூ. 78 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இத்திட்டத்தின் கீழ் நிலம் எடுக்கும் பணி ஆரம்ப கட்ட நிலையில் இருந்து வருகிறது. தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், எனவே அனைத்து தலைமை அலுவலகங்களும் தென்காசியில் அமைந்துள்ளதால் கல்லூரி, பள்ளி, மாணவா்கள் ,பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இத்திட்டத்தை விரைவுபடுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...