கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றாலம் அருவிகளில் வெகுவாக குறைந்த தண்ணீா்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் குறைந்தது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:48 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் குறைந்தது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்தது. குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மிகக்குறைவாகவே தண்ணீா் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் அதைவிட மிகவும் குறைவாகவே விழுகிறது.

ஐந்தருவியில் மூன்றுகிளைகளில் மட்டுமே தண்ணீா் விழுகின்றது. பழைய குற்றாலம் அருவியிலும் மிகவும் குறைவாகவே விழுகிறது. இதனிடையே கரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குளிக்க ஜன. 14 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜன.16 ஆம் தேதி பொதுமுடக்கம் என்பதால் அன்றும் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.