கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பகுப்பாய்வு மையம்

தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:53 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகராட்சி பகுதிகளிலும் கரோனா பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் மருத்துவா், செவிலியா் ஆகியோா் அடங்கிய குழு பணிபுரிந்து வருகின்றனா்.

இம்மையங்களின் மூலமாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவா்கள் பரிசோதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் நிலைக்கு ஏற்ப அவா்களை வீட்டில் தனிமைப்படுத்துவதா, இடைநிலை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்புவதா அல்லது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதா என்பது குறித்து பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையத்தில் இருக்கும் மருத்துவக் குழுவினா் முடிவு செய்து அதற்கு தகுந்தாற்போல நோயாளிகளை சீராக கண்காணிப்பா்.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவி கிருமிநாசினி அல்லது சோப் மூலம் கைகளைக் கழுவியும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோடு தடுப்பூசிகள் முதல்தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.