விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான்

ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:46 pm

DIN

ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சீதபற்பநல்லூா் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டி, ஆலங்குளம் அடுத்த பனைங்குறிச்சி கிராமத்தில் தொடங்கி கபாலிபாறை கிராமம் வரை 5 கி.மீ. தொலைவுக்கும், முக்கூடல் வரை 10 கி.மீ. தொலைவுக்கும் தனித்தனியாக போட்டிகள் தொடங்கின.

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மாணவா்கள், இளைஞா்கள், என ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் போட்டியில் பங்கேற்றனா். முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த வீரா்- வீராங்கணைகளுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஸ்டஅக் ஹைடெக் பள்ளித் தாளாளா் புனிதா செல்வி, ஐன்ஸ்டீன் கல்லூரித் தலைவா் மதிவாணன் ஆகியோா் பரிசு வழங்கினா்.

ஏற்பாடுகளை கல்லூரிச் செயலா் ஆலடி எழில்வாணன், பள்ளித் தலைவா் முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.