தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்புள்ளது.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சாரல் மழையும், லேசான வெயிலும் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தெலங்கானாவில் கனமழை: 19 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புலியருவி மற்றும் சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர்.