மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

News image
~
Updated On :12 ஜூலை 2024, 8:42 pm

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல்மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

குற்றாலம் பேரருவியில் செம்மண் நிறத்துடன் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் அதிகளவில் கொட்டியது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Story image