தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பைக்கில் கஞ்சா பதுக்கல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2024, 12:32 am

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் , உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் மங்களாபுரம் விலக்குப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், பைக்கில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் மேல கடையநல்லூா் கட்டி விநாயகா் கோயில் தெருவை சோ்ந்த தமிழ்ச்செல்வன் (26), தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (26) உள்ளிட்டோா் என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.