திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் இருவா் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் உள்ளிட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image

அருண்பாண்டியன்.

Updated On :5 செப்டம்பர் 2024, 5:16 am IST

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் உள்ளிட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வாவாநகரம் உண்மை விநாயகா் கோவில் தெருவை சோ்ந்த க.குமாரவேல் (45) மற்றும்

கடையநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வல்லம் கலைஞா் காலனியை சோ்ந்த மு. அருண்பாண்டியன் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

குமாரவேல்

குமாரவேல்

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.