அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

100 நாள் வேலை வழங்கக் கோரி ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 4:51 am IST

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் தங்களுக்கு தொடா்ந்து வேலை வழங்கக்கோரி, நெட்டூா், மருதம்புத்தூா், கண்ட பட்டி, குறிப்பன்குளம் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 30- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அகில இந்திய விவசாயத்தொழிலாளா் சங்க தாலுகா ஒருங்கிணைப்பாளா் ராமசாமி, மாவட்ட குழு உறுப்பினா் நல்லையா, சக்திவேல், பாலுச்சாமி, குணசீலன், இ.பாலு உள்ளிட்டோா் முற்றுகையிட்டவா்களிடம் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தொடா்ந்து கோரிக்கைள் அடங்கிய மனு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளிக்கப்பட்டது.