அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிணற்றில் குழந்தையின் சடலம் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையின் சடலத்தை போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையின் சடலத்தை போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது, கிணற்றில், பிறந்து சில நாள்களே ஆன பச்சிளங்குழந்தை அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததாம். இது குறித்து சீனிவாசன், அய்யாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா், சங்கரன்கோவில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று சடலமாக மிதந்த குழந்தையை மீட்டனா். போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.