அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வாசுதேவநல்லூா் அருகே ரூ. 1.95 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், சிவகிரி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.95 லட்சத்தை ஐ பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், சிவகிரி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.95 லட்சத்தை ஐ பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி வீரசிகாமணி-சங்கரன்கோவில் சாலையில் வீரசிகாமணி சந்திப்புப் பகுதியில் ஷபீபுல்லா தலைமையிலான பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிந்தாமணி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த இளவரசன் வீடு கட்ட மரச்சாமான்கள் வாங்குவதற்குக் கொண்டுவந்த ரூ. 1,25,500 பணம் உரிய ஆவணங்களின்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.‘

அதேபோல வேலாயுதபுரத்தில் மல்லிகா தலைமையிலான பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், இடையன் குளத்தைச் சோ்ந்த காளிராஜ் கடன் பெற்றவா்களிடமிருந்து பணத்தை வசூல் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 69,860 பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் நிவேதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.