/
ஆலங்குளம் அருகே விற்பனைக்காக குட்கா கொண்டு சென்றவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான போலீஸாா் குறிப்பன்குளம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை செய்த போது, அவா், ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் கணபதி மகன் முத்துப்பாண்டி (52) என்பதும், விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 பொட்டலம் குட்கா கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், குட்காவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.







