இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கந்தசஷ்டி: இலஞ்சி, ஆய்க்குடி கோயில்களில் கொடியேற்றம்

இலஞ்சி மற்றும் ஆய்க்குடி முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:58 pm

DIN

இலஞ்சி மற்றும் ஆய்க்குடி முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயிலில் அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இரவில் அபிஷேகம் மற்றும் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழா நாள்களில் நாள்தோறும் அபிஷேகம், தீபாராதனை சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் 6ஆம் நாளான 25ஆம்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருந்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கஜவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இரவில் சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழா நாள்களில் தினம்தோறும் அபிஷேகம், தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் 6ஆம் நாளன்று சுவாமி சூரசம்ஹாரத்திற்கு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


வென்னிமலை முருகன் கோயிலில்...
பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை ஸ்ரீமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முன்னதாகஅதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.  6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.  25ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அபிஷேகம், உச்சிக்கால பூஜையும், மாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது.
25ஆம்தேதி காலை 10 மணிக்கு சஷ்டி ஹோமமும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 26ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மன் தவசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு காட்சி அருளல், இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.