/

தச்சநல்லூரில் 24இல் மின்தடை

நெல்லை தச்சநல்லூர் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (அக்.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:57 pm

DIN

நெல்லை தச்சநல்லூர் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (அக்.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து  திருநெல்வேலி நகர்ப்புற மின்விநியோக செயற்பொறியாளர் ஐசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தச்சநல்லூர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை சாலை, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகர் ஆகிய பகுதிகளில் அக். 24 இல் மின்விநியோகம் இருக்காது. மேலும், இந்தப் பகுதிகளில் மின்பாதையைப் பராமரிக்க இடையூறாக உள்ள மரக் கிளைகளை அகற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.