இஸ்கான் கோயிலில் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நரசிம்ம அவதார நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நரசிம்ம அவதார நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இக் கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி லட்சுமி நரசிம்மருக்கு ஒன்பது கலசங்களில் விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன. பால், பழம், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், பழரசங்கள் போன்ற வகையான அபிஷேகங்கள் வலம்புரி சங்குகளால் நடைபெற்றன. பல வண்ண பூக்களால் புஷ்ப அபிஷேகமும், பூர்ண கும்ப ஆரத்தியுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கிருஷ்ண பலராமரையும், லட்சுமி நரசிம்மரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com