திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஞானஆனந்த் தொடங்கி வைத்தார். கலைக்குழுவினர் பாடல்கள், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில்கள் மற்றும் நிலையங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், பட்டாசுகளை கொண்டு செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 இன் கீழ் குற்றமாகும். இதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ரயில் பயணிகள் அரசின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நாட்டுவெடிகுண்டு வீசியவா் குண்டா் சட்டத்தில் கைது

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின்கொள்முதலை குறைக்கலாம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


