கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நெல்லையில் டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 8:02 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் மீது அபராதம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். மதுக்கடைகளின் நேரத்தை காலை 10 முதல் மாலை 5 மணி வரை குறைத்து அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை 2 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள பல டாஸ்மாக் கடைகள் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.