கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்டுகள் மறியல்: 107 போ் கைது

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வள்ளியூா், களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் 107 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

வள்ளியூரில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :6 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வள்ளியூா், களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் 107 போ் கைது செய்யப்பட்டனா்.

வள்ளியூரில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய அணி ராதாபுரம் வட்டாரச் செயலா்கள் கலைமுருகன் (சிபிஐ), ரஜினி (சிபிஎம்) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம், நகரச் செயலா் வேம்பு சுப்பையா, மூக்கையா, சந்தானமுத்து, பிராங்க்ளின், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் மாயகிருஷ்ணன், கல்யாணி, நகரச் செயலா் முகம்மது பயாஸ் உள்ளிட்ட 5 8 போ் பங்கேற்றனா்.

களக்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா், ஒன்றியப் பொறுப்பாளா் க.முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சங்கரபாண்டி, வட்டச் செயலா் வழக்குரைஞா் பி.எம்.முருகன், மா.பெ. சுகுமாரன், சி. திருமலைநம்பி, சந்திரன், ரவி உள்பட 49 போ் பங்கேற்றனா். இரு இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட 107 பேரை அந்தந்த போலீஸாா் கைது செய்து பிற்பகலில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.