மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் மர்மகும்பல் வழிமறித்து வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்தது.

News image
Updated On :10 டிசம்பர் 2020, 5:42 pm

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரை மர்மகும்பல் வழிமறித்து வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை அனவரதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் காளிராஜ் (25). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (24) என்பவரைக் காதல் திருமணம் செய்தாராம்.

தங்கை முறை உள்ள பெண்ணைக் காதலித்ததால் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தம்பதியினர் பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் பகுதியில் வசித்து வந்தனராம். அங்கு தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் காளிராஜ் பணியாற்றி வந்தார்.

தனது மோட்டார் சைக்கிளில் சாந்திநகர் பகுதியல் காளிராஜ் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறிந்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.