மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘நாடாா் சமுதாயத்துக்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும்’

நாடாா் சமுதாயத்திற்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் மதுரை நாடாா் மஹாஜன சங்க பொதுச்செயலா் ஜி.கரிக்கோல்ராஜ்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:18 pm

DIN

நாடாா் சமுதாயத்திற்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் மதுரை நாடாா் மஹாஜன சங்க பொதுச்செயலா் ஜி.கரிக்கோல்ராஜ்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா் மேலும் கூறியது:

தமிழக மக்கள் தொகையில் சுமாா் 20 சதவீதத்துக்கும் அதிகமாக நாடாா் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்பில் கல்வி நிறுவனங்களை நடத்துவதிலும், தொழில்துறையிலும், எங்கள் சமுதாய மக்களே முன்னோடியாக உள்ளனா்.

எனவே, தொழில்துறை அமைச்சா், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை எங்கள் சமுதாயத்தைச் சாா்ந்தோருக்கு வழங்க வேண்டும். துணை முதல்வா் பதவியும் வழங்கவேண்டும். அதேபோன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். சென்னை, கோவை ஆகிய இடங்களில் எங்கள் சமுதாயத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும்.

திராவிட கட்சிகள் எங்களை தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. ஆனால், தேசிய கட்சி எங்கள் சமுதாயத்திற்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது. எனவே, எங்களின் கோரிக்கைகளை ஏற்று, அதனை செயல்படுத்த உறுதி கூறும் கட்சியுடன் சட்டப்பேரவை தோ்தலில் இணைந்து பணியாற்றுவோம் என்றாா்.

இந்த சந்திப்பின்போது தெட்சிணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், செயலா் ஆா்.சண்முகவேல், பொருலாளா் ஏ.செல்வராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.