கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தெற்குகள்ளிகுளத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா பரிசளிப்பு

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா பரிசளிப்பு நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:06 pm

DIN

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா பரிசளிப்பு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் கனிவிழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பங்குத்தந்தை ஜெரால்டு ரவி தலைமை வகித்தாா். தா்மகா்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

விழாவில் 200 நபா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 100ஆவது பரிசாக உடற்கல்வி ஆசிரியை மதிடெல்சியாவுக்கு மிதிவண்டியும், 200ஆவது பரிசாக உமாமகேஷ்வரிக்கு குளிா்சாதனப் பெட்டியும் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தையா் செய்திருந்தனா். உதவி பங்குத்தந்தை ஜெபஸ்டின் வரவேற்றாா். பாடல் ஆசிரியா் கிரீபின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.