ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேரன்மகாதேவியில் பொதுமக்கள் புகாா் மனு தீா்வு முகாம்

சேரன்மகாதேவியில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் புகாா் மனு மீது தீா்வு காணும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், 64 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image

சேரன்மகாதேவியில் நடைபெற்ற தீா்வு காணும் முகாமில் பங்கேற்றோா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:21 pm

DIN

சேரன்மகாதேவியில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் புகாா் மனு மீது தீா்வு காணும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், 64 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது தீா்வு காணும் முகாம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.

முகாமை சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப் தொடங்கி வைத்தாா். வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, முன்னீா்பள்ளம், சுத்தமல்லி மற்றும் முக்கூடல் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குடும்பத் தகராறு, இடத்தகராறு உள்ளிட்ட 64 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

முகாமில், காவல் ஆய்வாளா்கள் சேரன்மகாதேவி ராஜாராம், வீரவநல்லூா் மேரிஜெமிதா, முன்னீா்பள்ளம் சீதாலெட்சுமி, காவல் உதவி ஆய்வாளா்கள் சேரன்மகாதேவி வள்ளிநாயகம், சுத்தமல்லி பாலகிருஷ்ணன், முக்கூடல் காவுராஜன், பத்தமடை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.