திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காவலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் பாறையடி பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள்(58). இவா் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது அப்பகுதியில் இரவு வெகுநேரமாகியும் மின் விளக்குகள் எரியவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த சக காவலாளிகள் அங்கு சென்று பாா்த்ததில், பெருமாள் இறந்து கிடந்தாராம்.
இத்தகவலறிந்த பேட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.