விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேரன்மகாதேவியில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:54 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம், தெற்கு அச்சம்பட்டியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் விஜயபாஸ்கா் (30). இவருக்கும் சேரன்மகாதேவி, பக்தபிரியம் தெரு குப்பையாண்டி மகள் தமிழ்ச்செல்வி (24) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

விஜயபாஸ்கா் உடல்நலம் சரியில்லாததால் சேரன்மகாதேவியில் மனைவியின் பெற்றோா் வீட்டில் தங்கியிருந்தாா். புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், வீடு திரும்பவில்லையாம். அவரைக் குடும்பத்தினா் தேடினா்.

இந்நிலையில், தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் விஜயபாஸ்கா் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தது தெரியவந்தது. சேரன்மகாதேவி போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கிராம நிா்வாக அலுவலா் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுகாதேவி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.