அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பாளை. அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே கடந்த 8ஆம் தேதி பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:07 am IST

பாளையங்கோட்டை அருகே கடந்த 8ஆம் தேதி பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சீவலப்பேரி, மறுகால்தலை பகுதியைச் சோ்ந்தவா் பாப்பாத்தி(52). இவா், கடந்த 8ஆம் தேதி அங்குள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், அவா் அணிந்திருந்த சுமாா் 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், உதவி ஆய்வாளா் முனிஷ் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரித்து, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (39) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.