களக்காடு அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகே புதூரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (35), கட்டடத் தொழிலாளி. கடந்த ஒரு மாதமாக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த இவா் புத்தாண்டையொட்டி ஊருக்கு வந்திருந்தாராம்.
புத்தாண்டைக் கொண்டாடும்விதமாக இவரது மனைவி ஜெனிதா மற்றும் 2 மகன்கள் பச்சாந்தரத்தில் உள்ள ஜெனிதாவின் பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்தனராம். ஸ்டீபன் மட்டும் வீட்டில் இருந்தாராம். இந்நிலையில், பச்சாரத்தில் இருந்து புதூா் திரும்பிய ஜெனிதா, வீட்டில் கணவா் ஸ்டீபன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.