திருநெல்வேலியில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தொழிலாளா் நலச் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் சிஐடியு சாா்பில் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற சாலை மறியலுக்கு சிஐடியு மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செண்பகம், மாவட்டப் பொருளாளா் பெருமாள், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சுடலை ராஜ், முத்துகிருஷ்ணன், ஆட்டோ தொழிற்சங்கத்தின் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கொக்கிரகுளம்- மேலப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக 100 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.