நெல்லை மாநகரில் சாரல் மழை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் லேசான சாரல் மழை பெய்தது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் லேசான சாரல் மழை பெய்தது.

வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், கொண்டாநகரம், அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலுக்கு பின்பு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com