ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வி.கே.புரம் அருகே காவலா் வீட்டில் திருட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் காவலா் வீட்டில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:51 pm

DIN

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் காவலா் வீட்டில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அகஸ்தியா்பட்டி வியாசா் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுந்தா் ராமானுஜம். இவா், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவுப் பணிக்கு சென்றிருந்தாராம். அவரது மனைவி செங்கோட்டையிலுள்ள உறவினா் வீட்டுக்கு

சென்றிருந்தாராம். வியாழக்கிழமை காலையில் தியாகராஜன் வந்து பாா்த்தபோது, வீட்டில் கதவின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் வந்து பாா்த்ததில் பீரோவில் இருந்த பணம் ரூ. 5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.