ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீரவநல்லூா் அருகே ரூ.60 ஆயிரம்மது பாட்டில்கள் திருட்டு

வீரவநல்லூா் அருகே அரசு மதுபானக்கடையில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:48 pm

DIN

வீரவநல்லூா் அருகே அரசு மதுபானக்கடையில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வீரவநல்லூா் அருகே உள்ள கிளாக்குளம் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வீரவநல்லூா் சீனியாபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மேற்பாா்வையாளராக உள்ளாா். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

தகவலறிந்து வந்த வீரவநல்லூா் போலீஸாா், ஆய்வு செய்ததில், கடையிலிருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.