விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாளை. அருகே பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:46 pm

DIN

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தாழையூத்து காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் புதியவன் செல்வன் (28). இவா் கடந்த வியாழக்கிழமை தாழையூத்தில் இருந்து மேலப்பாட்டத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். மேலப்பாட்டம் அருகே சென்ற போது திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கெண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.