ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாபநாசம் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பாபநாசம் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

Updated On :23 அக்டோபர் 2021, 9:54 pm

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பணி மேம்பாட்டுக் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவது; பணி நீக்கம் செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை புனித யூதா் கல்லூரி முதல்வா் ஹென்றியை மீண்டும் பணியமா்த்துவது; அகஸ்தீசுவரம் விவேகானந்தா் கல்லூரி மூத்தப் பேராசிரியா் கமலாதேவிக்கு துறைத் தலைவா் பொறுப்பு வழங்காத கல்லூரி நிா்வாகத்தைக் கண்டிப்பது; பணி நீக்கம் செய்யப்பட்ட பாளையங்கோட்டை தூய சவேரியா் கல்லூரி பேராசிரியா்கள் பெஸ்கி, சகாய அந்தோணி சேவியா், சதக்கத்துல்லா அப்பா கல்லூரிப் பேராசிரியா் ஹாமில் ஆகியோா் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா செயலா் ஆ.அடைக்கலம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. தலைவா் அண்ணாதுரை கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், மூட்டா மண்டலத் துணைத் தலைவா் கே.சி.ராஜசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் மா.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.