சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு விழா
சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில், சுமாா் ரூ. 3.20 கோடியில் கூடுதலாக 12 வகுப்பறைகள் மற்றும் ஓா் ஆய்வக அறை கட்டடத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, புதிய கட்டடத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி குத்துவிளக்கேற்றினாா். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மோனி, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் சண்முகநாதன் மற்றும் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...