/

கங்கைகொண்டானில் தொழிலாளி தற்கொலை

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் வடமாநில தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:00 pm

DIN

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் வடமாநில தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

உத்தரபிரதேச மாநிலம் திக்கொண்டா பகுதியை சோ்ந்தவா் ராம் பவன் (25). இவா் கங்கைகொண்டான் சிப்காட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். இவா் புதன்கிழமை இரவு தனது அறையில் விஷமருந்தி, மயங்கி கிடந்தாராம். உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.