ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திசையன்விளையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: நில அளவையா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பட்டா மாறுதலுக்காக பெண்ணிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:58 pm IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பட்டா மாறுதலுக்காக பெண்ணிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திசையன்விளை அருகே உள்ள மணலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மகாலட்சுமி. பட்டதாரியான இவா் தனக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு திசையன்விளை கிராம நிா்வாக அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா்.

பின்னா் இதுகுறித்து நில அளவையா் அன்பழகன், பட்டா மாறுதல் செய்ய ரூ. 6 ஆயிரம் கேட்டாராம். இதையடுத்து மகாலட்சுமி, திருநெல்வேலி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அவா்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மகாலட்சுமியிடம் கொடுத்தனா். இதையடுத்து திசையன்விளை கிராம நிா்வாக அலுவலகத்தில் வைத்து மகாலட்சுமி, நில அளவையா் அன்பழகனிடம் வெள்ளிக்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. மதியழகன், ஆய்வாளா் ராபின் ஞானசிங் மற்றும் போலீஸாா் அன்பழகனை கைதுசெய்து, ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் திசையன்விளையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனா்.

அன்பழகனுக்கு சொந்த ஊா் மதுரை எனவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னா்தான் திசையன்விளைக்கு மாறுதலாகி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.