கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாத்திரத்தில் சிக்கிய சிறுவனின் தலை!

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2023, 2:39 am

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

அணைத்தலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியா் (4). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் அந்தப் பாத்திரத்தில் தலைமாட்டிக்கொண்டது (படம்). அதிலிருந்து தலையை எடுக்க முடியாததால், பெற்றோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டு வந்தனா். அங்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் பிரத்யேக கருவிகள் மூலம் பாத்திரத்தை வெட்டி பத்திரமாக தலையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.