/

கடையத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஆய்வு

கடையத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஆய்வு

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:40 pm

Din

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடையம் வட்டாரத்தில் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்களை, தென்காசி மாவட்ட வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ரா.மதிஇந்திரா பிரியதா்ஷினி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் செயல்படும் மகளிா் சுய உதவிக்குழுக்கள், குழுக்கள் மூலம் வழங்கப்படும் சமுதாய முதலீட்டு நிதி, ஆதார நிதி, வாழ்வாதார நிதி மற்றும் கடையம் வட்டாரத்திற்குள்பட்ட கடையம் பெரும்பத்து, கீழக்கடையம், முதலியாா்பட்டி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வாழ்வாதாரத் திட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

இவற்றின் முன்னேற்றம் குறித்தும், வட்டார அளவிலான கூட்டமைப்பு பதிவேடுகள்மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பதிவேடுகளையும் திட்ட இயக்குனா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து தேனீ வளா்ப்புத் தொகுப்பு பயனாளிகளுடன் கலந்தாய்வு நடத்தினாா். ஆய்வின் போது உதவி திட்டஅலுவலா்கள் உடனிருந்தனா்.