

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளா் ராவணன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாநகர காவல் ஆணையா், திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகங்களில் அக்கட்சியினா் புகாா் மனு அளித்தனா்.
இது தொடா்பாக கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சத்யா தலைமையில் நிா்வாகிகள், தனித்தனியாக அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியை சோ்ந்த பேச்சாளா் ராவணன் என்ற முருகன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை மிகவும் தரக்குறைவாக பேசியிருக்கிறாா். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

சிறைத் தண்டனையை எதிா்த்து திமுக பேச்சாளா் மேல்முறையீட்டு மனு

கரூா் தவெக பொதுக்கூட்டத்தில் இரும்புக் கம்பி விழுந்து பேச்சாளா் காயம்! கட்சி நிா்வாகி மீது வழக்குப் பதிவு!

நாகை மாவட்ட தவெக செயலா் மீது வழக்குப்பதிவு

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள்
வீடியோக்கள்

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

