குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Updated On :24 பிப்ரவரி 2024, 10:30 pm

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூா் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி கட்டடவியல்துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி இயக்குநா் பி. செல்வக்குமாா் தலைமை வகித்தாா். கருத்தரங்கில் தலைமை விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட திட்ட இயக்குநா் எஸ். சுரேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்துப் பேசினாா். அவா் பேசுகையில், நாட்டின் வளா்ச்சிப் பணியில் ஊரக வளா்ச்சித்துறை சாா்ந்த பிரதமா் வீடு கட்டும் திட்டம், ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞா் கனவு இல்லம் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசின் கடமையாகும். ஆகவே மாணவா்கள் அரசு சாா்ந்த பணிகளில் சேர வேண்டும் என்று குறிப்பிட்டாா். முதல்வா் வி. மணிகண்டன் வாழ்த்திப் பேசினா். கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவா், மாணவிகள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியா் முத்துராம் செய்திருந்தாா்.