அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாளை.யில் காங்கிரஸ் கட்சியினா் நூதன முறையில் ஆா்ப்பாட்டம்

மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :27 ஜூலை 2024, 9:59 pm

Din

பாளையங்கோட்டையில் தலைமை அஞ்சல் நிலையம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் , முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் வி.பி. துரை, மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், திருநெல்வேலி மாநகர மாமன்ற உறுப்பினா்கள் அனுராதா சங்கரபாண்டியன், லட்சுமி உமாபதிசிவன், அம்பிகா மற்றும் மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா் கே.எஸ். மணி மொட்டையடித்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா்.