/

பாளை.யில் காங்கிரஸ் கட்சியினா் நூதன முறையில் ஆா்ப்பாட்டம்

மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :28 ஜூலை 2024, 3:30 am IST

பாளையங்கோட்டையில் தலைமை அஞ்சல் நிலையம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் , முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் வி.பி. துரை, மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், திருநெல்வேலி மாநகர மாமன்ற உறுப்பினா்கள் அனுராதா சங்கரபாண்டியன், லட்சுமி உமாபதிசிவன், அம்பிகா மற்றும் மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா் கே.எஸ். மணி மொட்டையடித்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.