மணல் திருட்டு: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே எம்.சாண்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே எம்.சாண்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழவூா் அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த கனரக லாரியில் எம்.சாண்ட் திருடிச் செல்வது தெரியவந்தது.

இதுதொடா்பாக உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே கிழக்குவிளையைச் சோ்ந்த ஆல்பா்ட் (47), நுண்ணிவிளை குசவன்குழியைச் சோ்ந்த விக்டா் ஜோன்ஸ் (54) ஆகிய இருவரையும் கைது செய்து, கனரக லாரியை பறிமுதல் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com