2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடுபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பைக் விபத்தில் காயமுற்ற சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2024, 6:58 pm

Din

திருநெல்வேலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருநெல்வே மாவட்டம், மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் அருண் பிரேம் (17). இவரது சகோதரி தாழையூத்து பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாராம். அவரை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக பைக்கில் தாழையூத்துக்கு அருண் பிரேம் சென்றுகொண்டிருந்தபோது தென்கலம் பகுதி சாலை வளைவில் பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில், பலத்த காயமுற்ற அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா். இது குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.