கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்லணை மாநகராட்சி பள்ளியில் 716 மாணவிகளுக்கு சைக்கிள்

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 716 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்குகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :6 நவம்பர் 2024, 7:34 pm

Din

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 716 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். 716 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பேட்டையில் உள்ள ராணி அண்ணா மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 170 பேருக்கும், திருநெல்வேலி நகரம் அலங்கார சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 51 பேருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

மண்டலத் தலைவா்கள் தச்சநல்லூா் ரேவதி, திருநெல்வேலி மகேஸ்வரி , மாமன்ற உறுப்பினா்கள் அனாா்கலி, மன்சூா், மாரியப்பன், சங்கா், உலகநாதன், சுப்பிரமணியன், பள்ளித் தலைமையாசிரியா்கள் ஹொ்லின்சுமதி, கனியம்மாள், சாந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.