/

முன்னாள் எம்.பி. மகன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் மகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:50 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் மகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் சா.ஞானதிரவியத்தின் 2-ஆவது மகன் தினகரன். இவரது வீடு கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனா்.