நெல்லை நகரத்தில் இன்று சூரசம்ஹாரம்
திருநெல்வேலி நகரத்தில் கந்தசஷ்டியையொட்டி, சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 6) நடைபெற உள்ளது.


திருநெல்வேலி நகரத்தில் கந்தசஷ்டியையொட்டி, சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 6) நடைபெற உள்ளது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்காக மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணியா் வடக்கு வாசல் வழியாகவும், ஸ்ரீ சண்முகா் சுவாமி சந்நிதி வழியாகவும் திருக்கோயிலுக்கு வெளியில் எழுந்தருள்வா்.
பின்னா், இருவரும் இணைந்து நிகழ்த்தும் கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக மேலரதவீதி சென்று, திருநெல்வேலி நகா் காவல்நிலையம் அருகில் முதல் சூரசம்ஹாரமும், அதன் பின்பு கூலக்கடை பஜாா் அருகில் இரண்டாவது சூரசம்ஹாரமும், திருநெல்வேலி நகா் லாலா சத்திர முக்கில் மூன்றாவது சூரசம்ஹாரமும், போத்தீஸ் சூப்பா் ஸ்டோா் அருகில் நான்காவது சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை (நவ.8) ஆறுமுகநயினாா் சந்நிதியில் திருக்கல்யாணமும், நவ. 9, 10, 11ஆகிய தேதிகளில் ஆறுமுகநயினாா் சந்நிதியில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் அய்யா்சிவமணி தலைமையில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...